அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் - திடீரென மூடப்பட்டதால் தவிக்கும் நோயாளிகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்த அம்மா உணவகம் திடீரென மூடப்பட்டு உள்ளதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் - திடீரென மூடப்பட்டதால் தவிக்கும் நோயாளிகள்
x
நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்த அம்மா உணவகம் திடீரென மூடப்பட்டு உள்ளதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.  
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுவதும் கோவிட் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல்நோக்கு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்டிருந்த அம்மா உணவகம் திடீரென மூடப்பட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து வெளியில் உணவு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள், அம்மா உணவகத்தை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்