கரூர்: 15 நாட்களாக திறக்கப்படாத காவிரி நீர்
கரூர் மாவட்டம் தென்கரை வாய்க்காலில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
கரூர் மாவட்டம் தென்கரை வாய்க்காலில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கட்டளை மேட்டு வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களில் 15 நாட்கள் ஆகியும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கட்டுமான பணிகளை முன்பே முடித்திருக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story