சிறப்பு எஸ்.ஐக்கு கொரோனா தொற்று - போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்த நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்த நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், உள்ளிட்ட 18 பேருக்கும் நேற்று கொரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சேதுராமு தலைமையிலான குழுவினர் காவல்நிலையத்தில் பணியாற்றும் 63 காவலர்கள், காவலர் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
Next Story