கணவன் மட்டன் பிரியாணிக்கு பதில், குஸ்கா வாங்கி வந்ததால் மனைவி, தீக்குளித்து தற்கொலை

கணவன் மட்டன் பிரியாணிக்கு பதில், குஸ்கா வாங்கி வந்ததால் விரக்தியடைந்த மனைவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மட்டன் பிரியாணிக்கு பதில், குஸ்கா வாங்கி வந்ததால் மனைவி, தீக்குளித்து தற்கொலை
x
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர், மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சவுமியா.  இந்நிலையில் சவுமியா தனது கணவனிடம் மட்டன் பிரியாணி சாப்பிட ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து மனைவியின் ஆசையை நிறைவேற்ற , மட்டன் பிரியாணி வாங்க ஓட்டலுக்கு சென்றார் மனோகரன். ஆனால், ஏனோ மட்டன் பிரியாணிக்கு பதில் குஸ்கா வாங்கி வந்துள்ளார் மனோகரன்.மட்டன் பிரியாணி தான் என எண்ணி பொட்டலத்தை பிரித்து பார்த்த சவுமியாவுக்கு, குஸ்கா இருந்ததை பார்த்து கவலை அடைந்துள்ளார். மேலும்  அதனை சாப்பிட மறுத்துள்ளார். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனோகரன் வீட்டிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது, சவுமியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சவுமியாவை தீக்காயத்துடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால்,  அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்