போலி வங்கி அதிகாரியை திட்டிய பெண் - பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய மர்ம ஆசாமி

கன்னியாகுமரி மாவட்டம் போலி வங்கி அதிகாரியை திட்டிய பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச படம் அனுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி வங்கி அதிகாரியை திட்டிய பெண் - பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய மர்ம ஆசாமி
x
கன்னியாகுமரி மாவட்டம் போலி வங்கி அதிகாரியை திட்டிய பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச படம் அனுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  குளச்சல் பகுதியில் வசிக்கும் ரோஸ் என்பவரை ஒருவர் செல்போன் மூலம் அழைத்து, தனியார் வங்கி அதிகாரி என கூறி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை தர வற்புறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு இதே போன்று ஒரு திருட்டு கும்பலிடம் ஏடிஎம் எண்ணை கூறி 8 ஆயிரம் ரூபாயை இழந்ததால் , உடனடியாக ரோஸ், அந்த நபரை கடுமையாக திட்டியுள்ளார். அதன் பின் அழைப்பை துண்டித்த அந்த மர்ம ஆசாமி, சிறிது நேரத்தில் ரோஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

குளச்சல் கொட்டில்பாடு பகுதியில் வசிக்கும் ரோஸ் என்பவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் ஒருவர், தன்னை தனியார் வங்கியின் அதிகாரி என கூறி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை தர ரோஸை வற்புறுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு இதே போன்று ஒரு திருட்டு கும்பலிடம் எடிஎம் எண்ணை கூறி 8 ஆயிரம் ரூபாயை இழந்ததால் , உடனடியாக ரோஸ், போலி வங்கி அதிகாரியை கடுமையாக திட்டியுள்ளார். அதன் பின் அழைப்பை துண்டித்த அந்த மர்ம ஆசாமி, சிறிது நேரத்தில் ரோஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்