அண்ணாமலையார் கோயில் நடை அடைப்பு - பிரம்ம தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடை அடைக்கப்பட்டது.
அண்ணாமலையார் கோயில் நடை அடைப்பு - பிரம்ம தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி
x
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடை அடைக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையாருக்கு கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயிலின் உள்ளே குருக்கள் பங்கேற்று இந்த நிகழ்வுகளை நடத்தினர். 



மயூரநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்  - தீர்த்தவாரியில் அர்ச்சர்கள் மட்டும் பங்கேற்பு 

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி, மற்றும் கடதீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி, கோயில் அர்ச்சகர்கள் மட்டும் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். 


சனி பகவான் கோயிலில் கிரகண பூஜை  - சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

சூரிய  கிரகணத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோயிலில், புண்ணிய கால சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான் சுவாமிகளுக்கு பால், சந்தனம் தேன், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்