வெட்டுக்கிளிகள் படையெடுப்பா ? - பொதுமக்கள் அச்சம்

சென்னை திருவொற்றியூர் ஜோதிநகர் உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் உள்ள செடிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பா ? - பொதுமக்கள் அச்சம்
x
சென்னை திருவொற்றியூர் ஜோதிநகர் உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் உள்ள செடிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த அவர்கள், செடிகள் மீது கிருமிநாசினி தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில்,ஜூன் ஜூலை மாத பருவகாலங்களில் எருக்கம் பூச்செடிகளில் உள்ள பால் வாசனைக்கு வெட்டுக்கிளிகள் வருவது இயல்பான ஒன்று என்றும் இவை விவசாய நிலங்களை அழிக்கக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்