கடலூர்: டீக்கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்தவருக்கு கொரோனா
கடலூர் நகரம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் பிஸ்கட் சப்ளை செய்த பேக்கரி கடை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கடலூர் புதுக்குப்பம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் வீட்டிற்குச் சென்று வந்த இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், பேக்கரி நடத்தி வரும் உரிமையாளருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் கடைகளுக்கு இந்த பிஸ்கட்டுகளை வழங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் எங்கெங்கெல்லாம் ஒரு நாள் பிஸ்கட் சப்ளை செய்து உள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் கடலூர் புதுப்பாளையம், புது உப்பலவாடி ரோடு மற்றும் சப்தகிரி நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நகரத்திற்குள்ளேயே தற்போது 9 இடங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story