முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு
சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றினால் மோட்டார் வாகன சட்டம் 179 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்து 160 வழக்குகளை போக்குவரத்து காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். இதுவரை முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து சுமார் 2 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story