ஈரோடு மாவட்டத்தில் நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு...

ஈரோடு மாவட்டத்தில், கடந்த வாரம் சிறிய அளவிலான நகைக்கடை, ஜவுளி கடைகளை திறக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு...
x
ஈரோடு மாவட்டத்தில், கடந்த வாரம் சிறிய அளவிலான நகைக்கடை, ஜவுளி கடைகளை திறக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பெரிய ஜவுளி, நகை கடை உரிமையாளர்களுடன் ஆலோசித்து, பல்வேறு கட்டுபாடுகளுடன் கடைகளை திறக்க, தமிழக அரசு அனுமதித்தது. இதில் குளிர் சாதன வசதி இருக்க கூடாது, ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வர வேண்டும், வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து, ஈரோட்டில் இன்று பெரிய ஜவுளி மற்றும் நகை கடைகள் திறக்கப்பட்டன.  முகூர்த்த நாளையொட்டி கூட்டம் குவிந்ததால், கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்