"வாட்ஸ் அப் காலில் பேச நளினி, முருகனை அனுமதிக்க முடியாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்
வாட்ஸ் அப் காலில் பேச நளினி, முருகனை அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
x
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம்  வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா  அமர்வு, தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறைத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம், நளினி மற்றும் முருகனை பேச அனுமதிக்க முடியாது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்