சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது
x
ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜாபேட்டை  அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டப்போது ஆற்காடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சாலை ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பார்சல் ஒன்றை காரில் நின்று கொண்டிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இதனைக் கண்ட போலீசார், அந்த காரை துரத்திச்சென்று அதில் இருந்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில் 9 MM நாட்டு கைத்துப்பாக்கியை சட்டவிரோதமாக இளைஞர்கள் வாங்கி சென்றது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்