வீட்டில் போதை பானம் தயாரிப்பு - பெண் உள்ளிட்டோர் கைது
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜே ஜே நகர் குடிசைப்பகுதியில் பெண் ஒருவர் தனது மகன்களுடன் திராட்சை பீர் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் பீர் தயாரித்ததாக மேரி அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே போதை பானம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story