3 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த, 3 முதுநிலை மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  பணியாற்றி வந்த, 3 முதுநிலை மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதுநிலை மாணவர் ஒருவருக்கு, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,  இதய சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.  இந்நிலையில் கொரோனோ உறுதி செய்யப்பட்ட மாணவருடன் பணியாற்றிய சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மாணவர் உட்பட 3 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த மாணவர்களில் இருவர் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்ததால் விடுதி அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  மற்றொரு மாணவரின் வீடு உள்ள பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கொரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்