144 தடை உத்தரவை மீறியதாக போலீசார் நடவடிக்கை : 5 நாளில் 54,400 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 54 ஆயிரத்து 400 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
144 தடை உத்தரவை  மீறியதாக போலீசார் நடவடிக்கை : 5 நாளில் 54,400 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
x
144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 54 ஆயிரத்து 400 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 
45 ஆயிரத்து 847 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவை  மீறி சென்றதாக 34 ஆயிரத்து 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  10 லட்சத்து 89 ஆயிரத்து 108 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 144 தடை உத்தரவை மீறியதாக 2 ஆயிரத்து 646 வழக்குகளும், போக்குவரத்து விதி மீறல்  தொடர்பாக 9 ஆயிரத்து 163 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்