"கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை" - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவை தடுக்க ரூ.9000 கோடி தேவை - நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

* இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதிப்புகளை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

* முன்னதாக, 4 ஆயிரம் கோடி ரூபாய் கோரிய நிலையில், தற்போது  9ஆயிரம் கோடி தேவை என குறிப்பிட்டுள்ளார்.

* இந்தியாவின் ஜிடிபி மற்றும் மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

* மாநில அரசுகளுக்கு கூடுதல் கடனுதவியாக ஒரு லட்சம் கோடி ரூபாய்  கடன் பெற அனுமதிக்க வேண்டும் என்றும்,

* தற்போது நிலவியுள்ள நெருக்கடியான கால கட்டத்தில், கோரிக்கையை  பரிசீலிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்