பெண் உள்பட 3 பேர் வெட்டி கொலை - கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
சேலம் செம்மண்திட்டு பகுதியில் பெண் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
செம்மண்திட்டு பகுதியில் ஆக்ராவை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், ஆக்ராவை சேர்ந்த தொழிலாளிகள் ஆகாஷ், அவரின் மனைவி வந்தனா, ஆகாஷின் உறவினர் சன்னி ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். உடன் இருந்தவர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story