8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல - அமைச்சர்  செங்கோட்டையன்
x
 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று வெளியான தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் மறுத்துள்ளார். 

ஓட்டுனர் உரிமம் மற்றும் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான, தனித்தேர்வுக்கான அறிவிப்புதான் அது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான 8 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு அல்ல அது என்றும் தந்தி டிவிக்கு அவர் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்த விரிவான அறிக்கையை, தேர்வுகள் துறை இயக்குனரகம் இன்று காலை வெளியிடும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்