சாதிமறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி : உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மணக்கோலத்தில் புகார் அளித்த ஜோடி
நாகை அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த இளம்ஜோடி, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
தரங்கம்பாடி அடுத்த ஆத்துபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இந்தக் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த பெண் தரப்பு அவரை உறவினருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதை அறிந்த பெண், தப்பி ஓடிசென்று காதலனை கரம்பிடித்துள்ளார். எனினும், தமது மற்றும் உறவினர்களால், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய அவர், பாதுகாப்பு கேட்டு, நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மணக்கோலத்தில் வந்து மனு அளித்துள்ளார்.
Next Story