கோவை : பயிற்சியின் போது CRPF வீரர் மாரடைப்பால் மரணம்
கோவை அருகே பயிற்சியின் போது சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அருகே பயிற்சியின் போது சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராக்கி பாளையம் பகுதியில் உள்ள CRPF முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சக வீரர்கள் அவரை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார்.
Next Story