டோனியிடம் பாராட்டு வாங்கிய 4 வயது சிறுவன்

4 வயதில் இளம் கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யட்ட சென்னையை சேர்ந்த சிறுவன் சனுஷ் சூர்யதேவ்...
x
4 வயதில் இளம் கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யட்ட சென்னையை சேர்ந்த சிறுவன் சனுஷ் சூர்யதேவ், டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரை பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விளையாடுவதை விளையாட்டுத்துறை அமைச்சர்  இணையத்தில் பார்த்ததாகவும், வருங்காலத்தில் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என வாழ்த்தியதாகவும் கூறினார். சிறுவனின் தந்தை முருகன் ராஜ் கூறுகையில், சனுஷ் சூர்யதேவ், தனது பிறந்தநாளில் பிறந்துள்ளதால், வருங்காலத்தில் கிரிக்கெட் வீரராக வருவார் என டோனி பாராட்டியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்