மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி : 3 சக்கர வாகனம் வழங்காததால் விரக்தி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரியான ரவிக்குமார் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு பல ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லாததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதை அடுத்து, தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ரவிக்குமாரிடம் உறுதியளித்தார்.
Next Story