"குடிசை வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு" : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை கோரிக்கை விடுத்தார்.
Next Story