வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் குழப்பம்

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளுக்கும் வரும் 30ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் குழப்பம்
x
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளுக்கும் வரும் 30ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல்  நடைபெற உள்ளது. இந்நிலையில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கதாசம் பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வரும்  27ந்தேதி தேர்தல் என்று கூறி  அதிகாரிகளால் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால்  வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் எந்த தேதி என்று அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்