"குட்டியுடன் ரயில்நிலையத்தில் நுழைந்த காட்டுயானைகள் - பயத்தில், ஓட்டம் பிடித்த ரயில்வே ஊழியர்கள்"

யானைகளை கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை
குட்டியுடன் ரயில்நிலையத்தில் நுழைந்த காட்டுயானைகள் - பயத்தில், ஓட்டம் பிடித்த ரயில்வே ஊழியர்கள்
x
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த பத்து நாட்களாக காட்டுயானைகள் உலா வருகின்றன. ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் குட்டியுடன், நுழைந்த காட்டுயானையால், டிராக்மேன்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர், சப்தம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இருப்பினும், தொடர்ந்து ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளதால் ரயில்வே ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, காட்டுயானைகளை கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்