"சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் : ஜாமீன் மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு"

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் : ஜாமீன் மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட  சிவசுப்பிரமணியம் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், இது மழையால் ஏற்பட்ட விபத்து என்று சிவசுப்பிரமணியன் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் தர  கூடாது..மேலும்5 அடியாக இருந்த  சுவரை அனுமதி பெறாமல் 21 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறி, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்