சென்னையில் தடுப்புச் சுவரில் கார் மோதல் : உயிர்தப்பிய மருத்துவ கல்லூரி மாணவர்

சென்னையில், மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
சென்னையில் தடுப்புச் சுவரில் கார் மோதல் : உயிர்தப்பிய மருத்துவ கல்லூரி மாணவர்
x
சென்னையில், மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இரவு 10 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால், அண்ணா நகரில் பரபரப்பு ஏற்பட்டது. காரின் ஏர்பேக் உடனே செயல்பட்டதால், மருத்துவ கல்லூரி மாணவர் ரோஷன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் லேசான காயமடைந்தார்.  விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து போலீசார், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்