"பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அமோகம்" - கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அமோகம் - கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
x
புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி அருகே, பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசர்குளம், கீழ்பாதி, சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான   ஏக்கர்களில், செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி கரும்புகள், தமிழகம் மட்டுமின்றி,  பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கஜா புயலால் கரும்பு சேதமடைந்த நிலையில், இந்த ஆண்டு அதிக மகசூல் தந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்