சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி : மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது.
சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி : மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்
x
திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது. சிவந்தி கோப்பைக்கான இந்த போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 28 பள்ளிகள் பங்கேற்றன. இறுதி சுற்றில், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி  ஸ்வாமிகள் கோல்டன் ஜூபிளி மேல்நிலை பள்ளி முதலிடம் பெற்றது. முதல் 3 இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கல்லூரி நாள் விழாவின் போது,  முதல் பரிசு பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பையை கல்லூரியின் ஆட்சிக் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வழங்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்