ஈரோடு - நாமக்கல் இடையே போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு பாசூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் கதவணையின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு - நாமக்கல் இடையே போக்குவரத்து பாதிப்பு
x
ஈரோடு பாசூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் கதவணையின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே  பவானி மூன்றாவது மின் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பாசூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கரையில் உடைப்பு உருவாகி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு - நாமக்கலுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் மெஹராஜ்,  உடைப்பை சரி செய்யும் பணியை ஆய்வு செய்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்