ஹெல்மெட் அணிவதன் அவசியம் - அட்வைஸ் செய்த ஆய்வாளர்
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளனர். இதைக் கண்ட ஆய்வாளர் வெங்கட் குமார் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பாதிப்புகள் குறித்து பொறுமையாகவும், தெளிவாகும் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறி ஹெல்மெட்டை தலையில் போடவைத்து அனுப்பி வைத்தார். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை கண்டித்து அபராதம் விதிக்கும் போலீசார் மத்தியில், ஆய்வாளர் வெங்கட் குமாரின் இந்த புதுமுயற்சி பலரையும் சபாஷ் போட வைத்தது.
Next Story