உயர்அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் : மிரட்டல் விடுத்தவரை மீட்ட போலீஸ்
சென்னை அடுத்த போரூர் ஏரியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவரை, போலீசார் சாமர்த்தியமாக பேசி இறக்கினர்.
சென்னை அடுத்த போரூர் ஏரியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவரை, போலீசார் சாமர்த்தியமாக பேசி இறக்கினர். சிவன்கோவிலைச் சேர்ந்த பாண்டி என்ற செல்லப்பாண்டி, குடிபோதையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.தகவல் அறிந்து வந்த போலீசார், சாதுரியமாகப் பேசி, நீண்ட நேரத்திற்கு பின் அவரை மீட்டனர்.
Next Story