"திருமணத்தில் இணைந்த காவலர்கள்"

காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
திருமணத்தில் இணைந்த காவலர்கள்
x
கிருஷ்ணகிரி அருகே காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலரை, உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆண் காவலர் திருமணம் செய்து கொண்டார்.ஒசூர் அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் நதியா ஆகியோர், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், கண்ணன், திருமணத்திற்கு மறுப்பதாக கூறி, நதியா தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, திருமணத்திற்கு கண்ணன் சம்மதித்ததால்,  போலீசார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்