குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீள ராஜநாகம்

ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட கோரிக்கை
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 நீள ராஜநாகம்
x
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த காட்டேரியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய 12 அடி நீள ராஜநாகம் ஒன்று, அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ராஜநாகத்தை கண்டு, அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வனத்துறையினர் வருவதற்குள், அந்த ராஜநாகம் தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் நிம்மதி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்