ரூ. 78.25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

இரு பெண்கள் உள்பட மூவரிடம் விசாரணை
ரூ. 78.25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
x
திருச்சி விமான நிலையத்தில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைக்குள் மறைத்து மூன்று பேர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சியை சேர்ந்த ஜெசிமா என்பவரிடம் இருந்து 766 கிராம் தங்கம், பிரவின்பானு என்பவரிடமிருந்து 758 கிராம் தங்கம் மற்றும், அசன்முகமது என்பவரிடமிருந்து 499 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேப்போல, பல்வேறு வகையில் கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் அளவு, 2 கிலோ 23 கிராம் எனவும், இதன் மதிப்பு, 78 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்