உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் 12 தேசிய விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதினை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை  5 சதவீதமாக ஆக குறைக்கவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்