உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியீடு : 30- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 4 ந் தேதி முதல் உதவிபேராசிரியர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னையால், விண்ணப்பிக்கும் தேதியினை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், www.tn.trb.nic.in என்கிற இணையதளபக்கத்தில் தேவையான சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்த பின் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story