கொடைக்கானல் அருகே இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் - 9 பேருக்கு அரிவாள் வெட்டு
கொடைக்கானல் அருகே நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேல்மலை கிராமம் பூம்பாறை என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பத்தில், வேலுச்சாமி மற்றும் குமரேசன் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில், அரிவாளால் வெட்டியதில் இருதரப்பையும் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே காயமடைந்த 9 பேரும் தேனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story