கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதம் : பிரசாதத்தை சாப்பிட்ட கணவன் பலி, மனைவி கவலைக்கிடம்

கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதம் : பிரசாதத்தை சாப்பிட்ட கணவன் பலி, மனைவி கவலைக்கிடம்
x
சென்னை ராயபுரத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த கார்த்திக் என்பவரிடம், எம்கேபி நகரை சேர்ந்த வேலன் என்பவர், 4 லட்ச ரூபாய் கொடுத்தால் கிண்டி அரசு ஆய்வகத்தில் அலுவலக உதவியாளர் பணியை பெற்று தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி 4 லட்ச ரூபாயை கொடுத்த கார்த்திக், 6 மாதங்களை கடந்தும் வேலை வாங்கித் தராததால், வேலனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இந்நிலையில், திடீரென கார்த்திக்கை செல்போனில் அழைத்த வேலன், பணி ஆணை தயாராக இருப்பதாகவும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே, கார்த்திக்கும் அவரது மனைவி சரண்யாவும் எம்கேபி நகருக்கு சென்றுள்ளனர். அவர்களிடம், பணி ஆணையை பெறும் முன் கோவில் பிரசாதத்தை சாப்பிடுங்கள் என வேலன் கூறியுள்ளார். வேலன் அளித்த பிரசாதத்தை சாப்பிட்ட உடனேயே கணவன், மனைவி இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். சரண்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தப்பியோடி வேலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பணத்தை திரும்ப கேட்டதால் விஷம் வைத்து கொல்ல முயற்சித்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்