வீட்டு பாதை பிரச்சினையில் மாமியார், மருமகள் தீக்குளிப்பு

பெரம்பலூர் அருகே மாமியார், மருமகள் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
குன்னம் அருகே உள்ள மேலஉசேன் என்ற கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மாமியார் பூங்கொடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மருமகள் தங்கலட்சுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு செல்லும் பாதையை, ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு தடுப்பதாக கூறி, இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில், மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது, இந்த பரபரப்பு சம்பவம்  நேர்ந்தது. இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்