பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது மட்டுமல்லாமல், பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்களை அகற்றக்கோரியும், உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்