இறைச்சி கடையில் நடந்த தகராறு காரணமாக இளைஞர் அடித்து கொலை - 4 பேர் கைது
வேலூர் மாவட்டம் அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவரின் உடல் ஏரியில் இருந்து சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவரின் உடல் ஏரியில் இருந்து சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது. அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் இறைச்சி கடையில் நடந்த தகராறு காரணமாக பழி வாங்கும் நோக்கில் ஜெய்லாப்தீனை அடித்து கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
Next Story