"தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது எனது உரிமை" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது தமது உரிமை - தெலங்கானாவிற்கு பணியாற்ற வேண்டியது தம்முடைய கடமை என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது தமது உரிமை - தெலங்கானாவிற்கு பணியாற்ற வேண்டியது தம்முடைய கடமை என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன்,.சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

செப். 8 - ல் பதவியேற்கிறார், டாக்டர் தமிழிசை? 

இதனிடையே, தெலங்கானா ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வரும் 8 ம் தேதி, பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபடும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், புதுடெல்லி சென்று, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்