சாதி, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.14,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்...
சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ரூனீசா என்ற பெண்ணிடம் வாரிசு மற்றும் சாதி சான்றிதழ் வழங்க, 14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக 3 பேரும் கேட்டுள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மெல்வின் ராஜாசிங் தலைமையில் வந்த போலீசார் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story