சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
x
நீதிமன்றம் உத்தரவிட்டும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி குழுவுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஏன் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததற்கு, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சிறப்பு அதிகாரி விசாரணையை, ஏடிஜிபி எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் அரசின் கொள்கையை புரிந்து கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து, செப்டம்பர் 11 ம் தேதிக்குள் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்