13 மாவட்டங்களில் சவுடு மண்அள்ளுவதற்கு தடை : மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க தடை விதிப்பு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சவுடு மண், மணல் எடுப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டல்களை நீதிமன்றம் வழங்கியிருந்தாலும் அது முறையாக பின்பற்றப்படுவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சவுடு மண் எடுக்க ஏற்கனவே வழங்கியிருந்த அனுமதி அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story