மர்மப் பொருள் வெடித்து 2 பேர் பலியான சம்பவம் : குறியீட்டு எண்ணை வைத்து போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அருகே மர்மப் பொருள் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மர்மப் பொருள் வெடித்து 2 பேர் பலியான சம்பவம் : குறியீட்டு எண்ணை வைத்து போலீசார் விசாரணை
x
செங்கல்பட்டு அடுத்த மானாம்பதி என்ற கிராமத்தில், கோயில் குளத்தை தூர்வாரும் போது மர்மப் பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில், கூவத்தூரை சேர்ந்த சூர்யா மற்றும் மானாம்பதி பகுதியைச் சேர்ந்த திலீபன் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெடித்த அந்த மர்மப்பொருளின், சிதறிய பாகங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் சில எண் குறியீடுகள் இருப்பதை கண்டறிந்த போலீசார், அந்த குறியீட்டு எண் எந்த வகையான பொருளைச் சேர்ந்தது என்றும், வெடிகுண்டுகளில் பொறிக்கப்பட்ட குறியீட்டு எண்ணா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்