அருப்புக்கோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டி பாண்டியன் நகரில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியரான சரஸ்வதி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரிடம் இருந்து 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்