கள்ளநோட்டுகளை மாற்றிய கேரள இளைஞர் கைது - வேனில் சுற்றுலா சென்றவர்களிடமும் விசாரணை

கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள கடைகளில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற கேரள மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளநோட்டுகளை மாற்றிய கேரள இளைஞர் கைது - வேனில் சுற்றுலா சென்றவர்களிடமும் விசாரணை
x
கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள கடைகளில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற கேரள மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் கொடுத்த புதிய 200 ரூபாய் நோட்டுகளை வாங்கிய வியாபாரிகள் சந்தேகத்தின்பேரில்,  கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அமர்ஷா என்பதும், அவருடன்  வேனில் 16 பேர், சுற்றுலா வந்ததும் தெரியவந்தது. அமர்ஷாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஆறு, 200 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேனில் இருந்த 16 பேரையும், வேனுடன் காவல் நிலையம் அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்