நெல்லை அருகே ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் கடையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
x
நெல்லை மாவட்டம் கடையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த மேலப்பாப்பான்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மார்பளவு சிமெண்ட் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 2014ம் ஆண்டு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்களால் மீண்டும் அந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அம்பை டி.எஸ்.பி ஜாஹிர் ஹுசைன் ஆய்வு மேற் கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்